பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

by Staff / 14-10-2024 04:31:15pm
பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி நாளை (அக்.15) சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via