ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை எதிர்த்து சீமான் பேட்டி

by Staff / 21-10-2024 12:53:09pm
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை எதிர்த்து சீமான் பேட்டி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் பகுதியில் தற்போது செயல்படும் பேருந்து ஆனது 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு புதிய பேருந்து நிலையம் மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆர்ப்பாட்டம் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார். பின்பு செய்திகளை பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது,ஒப்பந்தம் போடுங்கள் கல்லு நடுங்கள் நான் வந்து கூடாரம் போட்டு படுத்து கொள்கிறேன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.

 

Tags :

Share via