இன்று நீதி கட்சி தோன்றிய நாள் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் ....

தமிழக மறு மலர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்கு அசாதாரணமானது. சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட, இன்றைய தமிழகம், கேரளம், கர்நாடகம் ,ஆந்திரா உள்ளிட்ட நான்கை கொண்ட மாநிலங்களாகும். இங்கு வாழ்கின்ற மக்களை திராவிடர்கள் என்று மொழி அடிப்படையில் அழைக்கப்பட்டனர். திராவிடம் என்ற சொல் தமிழில் இருந்து தான் தோன்றியது என்று மொழியில் வல்லுநர்கள் திராவிட சொல்லின் பிறப்பை உபுரம்றுதிப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக வெளிநாடுகளில் படித்த செல்வந்தர்கள் சமூக விடுதலைக்காகவும் அரசியல் உரிமைகளை பெறுவதற்காகவும் முதன் முதலில் மாணவர் அமைப்பான திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கி ..பின்னர் திராவிடர் சங்கம் ஆகி அது அரசியல் இயக்கமாக நீதிகட்சியாகி..பெரியாரால், திராவிடர் கழகமாக உருவாக்க பெற்று இன்றளவும் அதன் சமூக விடுதலைக்கான இயக்கமாகவும் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் விடுதலை இயக்கமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தில் முன்னோடி இயக்கமான நீதி கட்சி தோன்றிய நாள் இன்று தான்.. சென்னை -ராயபுரம், ராபின்சன் பூங்கா தான் இந்த இயக்கத்தில் உருவாக்கத்தின் களம்.
இன்று நீதி கட்சி தோன்றிய நாள் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் அது குறித்த பதிவு:.

Tags :