தமிழிசை சௌந்தரராஜன் தாயார் ,மறைவு : தலைவர்கள் இரங்கல்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவி கிருஷ்ணகுமாரி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான . டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் திருமதி.கிருஷ்ணகுமாரி மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார்.
Tags :