வ.உ.சி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி

by Editor / 18-11-2021 04:05:20pm
வ.உ.சி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி மாவட்டம் - ஓட்டப்பிடாரம்,வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 85வது நினைவு தினத்தை முன்னிட்டு, வ.உ.சி நினைவு இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

 தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தங்கம் தென்னரசு (அமைச்சர் - தொழில் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு). இந்த நிகழ்வில்,சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வாகை சந்திரசேகர் (தலைவர் - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்), ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via