ஒபிஎஸ் - சசிகலா சந்திப்பு - தொண்டர்கள் உற்சாகம்

by Staff / 03-02-2024 01:17:17pm
ஒபிஎஸ் - சசிகலா சந்திப்பு - தொண்டர்கள் உற்சாகம்

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் சந்தித்து பேசினர். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்பகுதியில் அதிமுகவினர், ஓபிஎஸ் அணியினர், அமமுகவினர் திரண்டுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சசிகலாவின் கார் அருகே சென்ற ஒ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா பேசிவிட்டு புறப்பட்டார்.

 

Tags :

Share via