பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே மோதல் ஊரடங்கு மீறி நடந்த சண்டையில் அறுபத்தி ஐந்து பேர் படுகொலை

by Editor / 18-07-2022 02:35:46pm
பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே மோதல் ஊரடங்கு மீறி நடந்த சண்டையில் அறுபத்தி ஐந்து பேர் படுகொலை

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர்.புளு நையில் மாகாணத்தில் ஹவுஸ  மற்றும்  பிரிடா பிரிவு பழங்குடியின மக்கள் இடையே சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இரவு ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட போது இரு பிரிவுகள் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via