இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் பாலியல் பலாத்காரம்

by Staff / 01-01-2025 04:02:01pm
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் பாலியல் பலாத்காரம்

ராமநாதபுரத்தை அடுத்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த, புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகியோர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo