ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

ஓடும் ஆட்டோவில் 18 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 18 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில், சேலம் மாவட்டத்தில் இருந்து மாதவரம் செல்வதற்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்தார். இரவு நேரம் என்பதால் பஸ் வராது எனக்கூறி ஆட்டோவில் கூட்டிச் சென்று 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
Tags :