சதுரகிரி கோவிலுக்கு 23 ந் தேதி வரை  பொதுமக்கள் செல்வதற்கு தடை-

by Editor / 20-08-2021 04:47:29pm
 சதுரகிரி கோவிலுக்கு 23 ந் தேதி வரை  பொதுமக்கள் செல்வதற்கு தடை-

 


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 23 ந் தேதி வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிக்காட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 20.08.2021 முதல் 23.08.2021 வரை பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்றுபரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஆகஸ்ட் 20.08.2021 முதல் ஆகஸ்ட் 23.08.2021 வரை மேற்படி கோவில் தரிசனம் செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறைமலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தரவேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தெரிவித்துள்ளார்கள்.

 

Tags :

Share via