பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் அரசு தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதனடிப்படையில் இன்று (மார்ச். 5)மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், துறை தலைவர் மற்றும் முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமாக கோஷங்களை எழுப்பி கண் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Tags :