நகை திருடுப்போனதால் விபரீத முடிவு... தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி...
விளாத்திக்குளம் அருகே தனியே வாழ்ந்து வந்த மூதாட்டி, நகை திருடுப்போனதால் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் பகுதியைச் சேர்ந்த காசியம்மாள் என்ற மூதாட்டி, தனது நான்கு குழந்தைகளும் திருமணமாகி வெளியூரில் வசிக்கும் நிலையில், தனியே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மூதாட்டி, அப்பகுதி கோவில் திருவிழாவிற்கு சென்ற போது, மூதாட்டியின் 5 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி, ஏற்கனவே தனியே வாழ்ந்து எந்த பயனும் இல்லை, நகையும் திருடு போய் விட்டது என கடிதம் எழுதி விட்டு, மண்ணெணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடிதத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :