மக்காச் சோளத்தட்டுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரிந்து உயிரிழப்பு..

by Admin / 21-08-2021 02:12:34pm
மக்காச் சோளத்தட்டுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரிந்து உயிரிழப்பு..

பழனி அருகே மக்காச் சோளத்தட்டுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் எரிந்து இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்தமான மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 தகவலின்பேரில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் தட்டைக்குள் எரிந்து இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் கிடைந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், இறந்த கிடந்தது நிலத்தின் உரிமையாளர் சின்னராசு,  அவரது மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி மற்றும் மகன் கார்த்திகேயன் என்பதையும் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் உடனடியாக உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், சோளத்தட்டை எப்படி எரிந்தது? என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
 இதற்கிடையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் எரிந்து இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via