பேரவை நேரலை ஒளிபரப்பை தொடங்க வேண்டும்: கமல்ஹாசன்

by Editor / 22-08-2021 05:07:42pm
பேரவை நேரலை ஒளிபரப்பை  தொடங்க வேண்டும்: கமல்ஹாசன்

திமுக தேர்தல் அறிக்கைப்படி, பேரவை நேரலை ஒளிபரப்பை நாளையே தொடங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடா் செப்டம்பா் 21-ஆம் தேதிவரை நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பேரவையின் நிகழ்ச்சி நிரல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி செப்டம்பா் 21-ஆம் தேதியோடு நிறைவடைய இருந்த கூட்டத்தொடா் செப்டம்பா் 13-ஆம் தேதியோடு நிறைவடையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கைப்படி, பேரவை நேரலை ஒளிபரப்பை நாளையே தொடங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via