2ஆம் திருமணம் செய்த பெண் தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பெண் கோமதி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே, அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த கிளின்டன் என்பவருடன் காதல் ஏற்பட்டு, அவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கோமதி. கிளின்டன் தினமும் குடித்துவிட்டு சண்டையிடுவதால் மனஉளைச்சலில் இருந்த கோமதி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :