ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாகக் கூறி திமுக உறுப்பினர் நரேஷ்குமாரை தாக்கியதாக ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Tags :