பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், முடிவுகள் வருகிற 9 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!