மண் சரிவால் 5 பேர் பலி - தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

by Editor / 20-05-2025 04:49:40pm
மண் சரிவால் 5 பேர் பலி - தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via