சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்கு விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்கு விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் - நீதிபதி ஆக.4 ம் தேதி வழக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது ஏற்கனவே நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அப்ரூவராக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு இன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தற்போது ஆஜர் படுத்தி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் தனது தரப்பு வாதத்தை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்ததை நீதிபதி முத்துக்குமரன் படித்தார். இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக அனுமதிக்க கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.பின்னர் மதுரை மாவட்ட மத்திய சிறைக்கு ஸ்ரீ தர்ரை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
Tags : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்கு விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்


















.jpg)
