பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

by Staff / 17-08-2025 06:49:13pm
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பட்டானூரில்  ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள் மொழி, பொதுச் செயலர் முரளி சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என்பது உள்ளிட 37  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது  அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. 

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய டாக்டர் ராமதாஸுக்கு அதிகாரம் - பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார்.

பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை வாசிப்பு.அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்...

ராமதாஸ் தலைமையில் கூடிய பாமக பொதுக் குழு கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில்...

01) மைக்கை தூக்கிப் போட்டதுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது

02) புகைப்படம், பெயர் விவகாரத்தில் ராமதாஸ் வலியுறுத்திய பின்னரும், கூட்டங்களில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசி வருவது

03) தைலாபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு, 100 மாவட்ட செயலாளர்களை வராமல் தடுத்தது

04) பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது

05) சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது

06) ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டி, அவருக்கே தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது

07) சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது

08) பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது

09) ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது

10) ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது

11) அனுமதி பெறாமல் பொதுக்குழுவில், தனி இருக்கை, துண்டு வைத்து, 'ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க' வேண்டியது

12) ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது

13) அனுமதியை மீறி 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் கபட நாடகம்

14) ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது

15) ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது

16) மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது

 

Tags : பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

Share via