சொத்து தகராறில் தாய் - மகள் குத்திக் கொலை: சித்தப்பா மகன் வெறிச்செயல்!

by Admin / 29-08-2021 11:06:08pm
சொத்து தகராறில் தாய் - மகள் குத்திக் கொலை: சித்தப்பா மகன் வெறிச்செயல்!



ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே சொத்து தகராறில் தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே சொத்து தகராறில் தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் அருகேயுள்ள சத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவருக்கும் அவரது பெரியப்பா குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனிவாசராவ் அடிக்கடி தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதேபோல், சொத்து பிரச்சினை குறித்து பேசுவதற்காக சென்ற போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சீனிவாசராவ், பெரியம்மா பத்மாவதி மற்றும் அவரது மகள் லட்சுமி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சீனிவாசராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via