டிசம்பர் 17ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம்- அன்புமணி
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி டிசம்பர் 17ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். வாருங்கள் களம் காணுவோம், வன்னியர் சமூகநீதியை வென்றெடுப்போம்! என அழைப்பு விடுத்துள்ளார்.
Tags : டிசம்பர் 17ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம்- அன்புமணி



















