இந்தியா - பாக். போட்டி மீண்டும் தொடக்கம்

by Staff / 02-09-2023 04:38:51pm
இந்தியா - பாக். போட்டி மீண்டும் தொடக்கம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இலங்கை பல்லகெல்லேவில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துது. இந்திய அணி 4.2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இந்நிலையில் மழை நின்றுள்ளதால் நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 11 ரன்கள், விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

Tags :

Share via