எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

by Editor / 17-10-2021 10:47:25am
எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

அதிமுகவின் பொன்விழாவையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அவர்கள், மாலையணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.

அதிமுகவின் பொன்விழாவையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அவர்கள், மாலையணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார். அங்கு, அதிமுக கொடியையும் ஏற்றி வைத்துள்ளார். அவருக்கு அங்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொன்விழா ஆண்டும் கொடியேற்றும் நிகழ்வையொட்டி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். நேற்று, இவர் மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எஞ்சினார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via