கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மூன்று இந்திய இளைஞர்கள் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரின் உயர்தரப் பகுதியான கிரெசண்ட் பீச்சில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மூன்று இந்திய இளைஞர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அர்ஜோத் சிங் (21), தரன்வீர் சிங் (19), மற்றும் தயாஜீத் சிங் பில்லிங் (21).சம்பவம்: பிப்ரவரி 1, 2026 அன்று அதிகாலை 3:50 மணியளவில் ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கியால் சுட்டதுடன், தீயையும் மூட்டியுள்ளனர்.இவர்கள் மீது கனடா குற்றவியல் சட்டத்தின் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களது விசா நிலை குறித்து கனடா எல்லை சேவைகள் முகமை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.பிப்ரவரி 5 வரை இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக சர்ரே நகரில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த சர்ரே காவல்துறைபுராஜெக்ட் அஷ்யூரன்ஸ் என்ற சிறப்பு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது
Tags :


















