“மாணவர்கள் மனம் தளர வேண்டாம்”.. இபிஎஸ் வேண்டுகோள்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இத்தேர்வில் தேர்ச்சிப் பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; நன்கு படித்து மீண்டும் தேர்ச்சி அடைய உங்களுக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















