விஷம் அருந்தி இளைஞர் உயிரிழப்பு

by Staff / 24-12-2023 03:31:47pm
விஷம் அருந்தி இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துசாமிபட்டி பகுதியில் 27 வயதுடைய இளைஞர் தற்கொலைக்கு முயன்றார். பின் அவர் மீட்கப்பட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via