பயங்கர வெடிவிபத்து - 13 பேர் பலி

by Staff / 24-12-2023 03:33:42pm
பயங்கர வெடிவிபத்து - 13 பேர் பலி

கிழக்கு இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள நிக்கல் பதப்படுத்தும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ஆலையில் பழுது பார்க்கும்போது திடீரென பயங்கரமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 5 சீனர்கள் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுலவேசி தீவு கனிம வளம் நிறைந்த ஒரு நாடாகும். நிக்கல் மின்சார வாகன பேட்டரிகள், துருப்பிடிக்காத எஃகுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

Tags :

Share via