நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர்

by Staff / 24-12-2023 03:37:32pm
நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர்

மத்தியபிரதேச மாநிலம் காந்தி நகரை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் இரவு 10:30 மணியளவில் தனது கடையை பூட்டிவிட்டு இந்தூர் நகர் வழியாக வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது நாய் ஒன்று அவரை பார்த்து நீண்ட நேரமாக குறைத்துள்ளது. அப்போது அங்கு வந்த நாயின் உரிமையாளரான 65 வயது பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை வயிற்றில் மிதித்து தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்த போலீசார் அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via