ஏழை மாணவர்களின்  எதிர்காலத்தை சூறையாடும் நீட்: சூர்யா 

by Editor / 19-06-2021 04:05:19pm
ஏழை மாணவர்களின்   எதிர்காலத்தை சூறையாடும் நீட்: சூர்யா 

 

 

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வுக்கு

நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூர்யா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசுப்பள்ளியில்படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின்வாழ்க்கை முன்னேற்றத்திற்குகல்வியே ஆயுதம்‌'. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்‌, பணம்‌. படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும்இருக்கிற சூழலில்‌, தகுதியைத்தீர்மானிக்க. “ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது.எளிய குடும்பத்தினர்கல்வி பெற ஆதாரமாக இருக்கும்அரசு மற்றும்அரசு உதவிப்பெறும்பள்ளிகளில்படிக்கும்முறையே 40% மற்றும்‌ 25% மாணவர்களில்‌ 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர்‌. தங்கள்எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள்பள்ளிக்கல்வி படித்த பிறகும்நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும்என்பது கல்வித்தளத்தில்அவர்களை பின்னுக்குத்தள்ளும்சமூக அநீதி. 'நீட்நுழைவுத்தேர்வு வைக்கப்படுவதன்மூலம்மருத்துவராக வேண்டும்என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின்கனவில்தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின்வடுக்கள்காலத்திற்கும்மறையாது. மாணவர்நலனுக்கும்‌, மாநில நலனுக்கும்‌ 'நீட்‌' போன்ற நுழைவுத்தேர்வுகள்ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி .கே.ராஜன்அவர்கள்தலைமையிலான குழு, "நீட்தேர்வின்‌' பாதிப்புகள்பற்றி மக்கள்கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில்படிக்கிற மாணவர்களுடன்இணைந்து பயணிக்கிற அகரம்ஃபவுண்டேஷன்‌, மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம்பதிவு செய்கிறது.நமது பிள்ளைகளின்எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்கிய, 'நீட்தேர்வின்‌' பாதிப்பின்தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும்‌. மாணவர்களும்‌, அவர்தம்குடும்பங்களும்அனுபவிக்கிற துயரங்களைத்தவறாமல்நீதிபதி .கே.ராஜன்அவர்கள்தலைமையிலான குழுவிடம்‌, neetimpact2021@gmail.com எனும்மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன்‌ 23-ஆம்‌. தேதிக்குள்பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌.இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள்நிறைந்த நாட்டில்‌, கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம்‌. அது ஒன்றே, நிரந்தர தீர்வு. 'கல்வி மாநில உரிமை' என்கிற கொள்கையில்அனைத்து அரசியல்கட்சிகளும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌.இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via