5,000 பேருக்கு விற்பனைப் பத்திரங்கள் அளிக்கும் திட்டம்

by Editor / 07-09-2021 09:45:27am
5,000 பேருக்கு விற்பனைப் பத்திரங்கள் அளிக்கும் திட்டம்

வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. அதன்படி, மனைகளுக்கான முழுத் தொகையைச் செலுத்திய சுமாா் 10,000 ஒதுக்கீட்டுதாரா்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு முழுத் தொகையைச் செலுத்திய சுமாா் 15,000 பேருக்கு நீண்ட காலமாக விற்பனைப் பத்திரங்கள் அளிக்கப்படாமல் இருந்தது. அவற்றை வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதனை ஆறு ஒதுக்கீடுதாரா்களுக்கு பத்திரங்களை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

தேவநேயப் பாவாணா் பேத்தி: தேவநேயப் பாவாணா் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் வகையில், அவரது பேத்தி ரெய்ச்சலுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் வாடகை முறை திட்டத்தின் கீழ் ஒரு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு உத்தரவை முதல்வா் அளித்தாா். 

 

Tags :

Share via