தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா; 29 பேர் பலி

by Editor / 15-09-2021 09:20:33pm
தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா; 29 பேர் பலி

செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 29 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,658 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,38,668-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக இன்று பலி எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,246-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து1,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,86,786-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,50,226 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

 

Tags :

Share via