மது போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்

by Editor / 30-06-2022 08:49:34am
மது போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்

திருவாரூர் மாவட்டம் ஹரித்துவாரமங்கலம் கடைவீதியில் மதுபோதையில் சூர்யா என்கிற இளைஞர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து ஹரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட சூர்யாவை பிடிக்கும் பொழுது கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் காவலர் மணிகண்டனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

Tags : The young man who stabbed the guard in the neck while intoxicated

Share via