இராக்: கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு

by Editor / 30-09-2021 11:03:37am
இராக்: கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு

இராக்கில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இராக்கில் இதுவரை 20 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 2,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 20 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,389 ஆகவும் பதிவாகியிருக்கிறது.மேலும் இராக்கில் 47.16 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via