by Admin /
12-07-2023
12:49:16pm
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேர்வதாக இருந்தால், அத்தகையவர்கள் கழக பொதுச்செயலாளருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும் கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேர்ந்தமட்டுமே கழக உறுப்பினர்களாக கருதப்படுவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலம் தொட்டு இந்த நடைமுறை பின்பற்று வருகிறது. ஆகவே ,கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள் மீண்டும் கழகத்தில் சேர்வதாக இருந்தால் மேற்கூறிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பில்குறிப்பிட்டுள்ளாா்.
Tags :
Share via