திருப்பதி ஏழுமலையான் பட்டாடை; ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது:

by Editor / 24-10-2021 07:54:08pm
திருப்பதி ஏழுமலையான் பட்டாடை; ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது:

திருப்பதி கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் அடைந்திருந்த பட்டாடை ஆண்டாளுக்கு அணிவிக்க திருப்பதி தேவஸ்தானம் கொடுத்து அனுப்பி இருந்தது . அந்தப் பட்டாடை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு ஆண்டாள் நேற்று ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி ஆகியவை திருப்பதி ஏழுமலையான் அணிந்துகொள்ள கோயில் நிர்வாகத்தின் சார்பில் கொண்டு செல்லப்படும் ஆண்டாள் சூடிய அந்த மாலையை புரட்டாசி பிரம்மோற்சவ 5ம் நாளன்று திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் அணிந்து கொள்வார்.

ஆண்டாள் சூடிய மாலையை கொண்டு சென்றதற்கு பதிலாக திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் அணிந்திருந்த பட்டாடை மற்றும் இரண்டு வெண் குடைகளை கொடுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினரிடம் கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த பட்டாடை நேற்று வெள்ளிக்கிழமை ஊஞ்சல் சேவையின் போது ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் அணிந்து கொடுத்தனுப்பிய பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியை காண திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் சமூக இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கொடுத்தனுப்பிய பட்டாடை அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Tags :

Share via