உதயநிதி பேசியது தவறு - டிடிவி தினகரன்
உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி பேசியது தவறு; சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார். அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியம் ஆகாது. தீய சக்தியும் ஜெயிக்கக்கூடாது, துரோக சக்தியும் ஜெயிக்கக்கூடாது என்பது எங்களின் நோக்கம். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கவும் தயார் என கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :