15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்

by Staff / 19-04-2023 02:49:13pm
15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்

அரசுப் பேருந்துகளை அதிக அளவாக 7 ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளும், பிற ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைக் கருத்தில் கொண்டு 15 அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via