காவலர்களுக்கு குறிப்பாணை வெளியீடு

by Editor / 09-11-2021 03:11:47pm
 காவலர்களுக்கு குறிப்பாணை வெளியீடு

 

வாராந்திர ஓய்வில் செல்லும் காவலர்கள் அதற்கு முன் கட்டாயம் 5 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என காவல்துறை குறிப்பாணை வெளியிட்டுள்ளது.

காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் தமிழ்நாடு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள் திருமண நாள் நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வாராந்திர ஓய்வில் செல்லும் காவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த குறிப்பாணையை காவல்துறை வெளியிட்டுள்ளது.
 
அதில் வாராந்திர ஓய்வு பெறும் காவலர்கள் கட்டாயம் அதற்கு முன் 5 நாள் பணி செய்திருக்க வேண்டும் எனவும், வாராந்திர ஓய்வுக்கு செல்லும் முன் தங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் வாராந்திர ஓய்வை நீட்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via