முதல்வர் நாளை மழையால்பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு..

by Editor / 12-11-2021 11:50:42pm
முதல்வர் நாளை மழையால்பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு..

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை சேதங்களை முதல்வர்  மு. க. ஸ்டாலின்  நாளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  திருவாரூர்  மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை (13.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

காலை 07.30 மணி முதல்

கடலூர் மாவட்டம்
(1) அரங்கமங்கலம்
(2) அடூர் அகரம்

காலை 09.30 மணி முதல்

மயிலாடுதுறை மாவட்டம்
(3) இருக்கூர்
(4) தரங்கம்பாடி

காலை 11.30 மணி முதல்

நாகப்பட்டினம் மாவட்டம்
(5) கருங்கனி
(6) அருந்தவபுலம்

திருவாரூர் மாவட்டம்

(7) இராயநல்லூர்
(8) புழுதிக்குடி

மாலை 03.30 மணி

தஞ்சாவூர் மாவட்டம்
(9) பெரியக்கோட்டை

 

Tags :

Share via