இந்தியாவில் கொரோனா - புதிதாக 11,850 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா புதிதாக 11,850 பேருக்கு தொற்று
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 12,403 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 483 ஆக உயர்ந்தது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,850 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 6,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 36 ஆக உயர்ந்தது.
கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 471 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 555 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,63,245 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 12,403 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 483 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் குணம் அடைந்தோர் சதவீதம் 98.26 ஆக அதிகரித்தது. தற்போது 1,36,308 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 274 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 58,42,530 டோஸ்களும், இதுவரை 111 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 12,66,589 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 62.23 கோடியாக உயர்ந்துள்ளது.
Tags :