செங்கோட்டை - புனலூர் மின்மயமாக்கலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு ரூபாய் 61.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இன்று 29/11/21 திங்கள்கிழமை ரயில்வே அமைச்சக ரயில்வே வாரிய ரயில்வே மின்மயமாக்கல் செயல் இயக்குனர் பூபேந்திர சிங் போத் பிரயாக்ராஜ் ( அலகாபாத்) மத்திய மின்மயமாக்கல் நிறுவன பொது மேலாளர் அனுப்பிய ஆணை கடிதம். *இந்த மின்மயமாக்கல் ஆணை பெற பெரிதும் உதவிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர்.தனுஷ் எம் குமார் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் NK பிரேமசந்திரனுக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர், உப தலைவர்,செயலர் ,ஊடக & மக்கள் தொடர்பாளர் மற்றும் ஏனைய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுக்களை தென்காசி மாவட்டத்தின் சார்பிலும் செங்கோட்டை நகர மற்றும் வட்டார மக்கள் சார்பிலும் தெரிவிக்கின்றனர்.
Tags :