தமிழகத்தில் 167 பேர் பலி
தமிழகத்தில் நேற்று 23,310 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 12,72,602 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,64,081 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 20,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 11,29,512 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 1,28,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 167 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 14,779 ஆக அதிகரித்துள்ளது.
Tags :