நிலக்கரி சுரங்க வெடிவிபத்து - 25 பேர் பலி

by Staff / 15-10-2022 10:52:49am
நிலக்கரி சுரங்க வெடிவிபத்து - 25 பேர் பலி

துருக்கி நாட்டின் பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via