சென்னையில் அதிகரிக்கும் கொரோனா

by Admin / 04-01-2022 06:07:53pm
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில்,தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.முகக்கவசம் அணிவதில் அக்கறையின்மை,தனிமனித இடை வெளியை பின் பற்றாமை,பொது வெளியில் கூட்டம் கூட்டமாகச்செல்வது, ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டோர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது போன்ற காரணங்களால் தொற்று பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை கவலை கொண்டுள்ளது.அரசு மட்டுமே நோயை ஒழித்து விட முடியாது .மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும்.சென்னையில் உள்ள39,537தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்170 தெருக்களில் 3 க்கு அதிகமானோர், 86தெருக்களில் 4க்கும் மேற்பட்டோரும்51 தெருக்களில் 5க்கு மேற்பட்டோரும்988தெருக்களில் 3பேருக்கு குறைவானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 38,379தெருக்களில் பாதிப்பு இல்லைஎன்றும் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில்228பேர் பாதிப்படைந்துள்ளதாக  மொத்தில் சென்னையில் கொரோனா பாதித்தோர் 3483 பேர் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

 

Tags :

Share via