பொங்கல் பண்டிகைவிடுமுறை முடிந்து 16ஆம் தேதி முன்பதிவு செய்தவர்கள் மாற்று தினத்தில் பயணிக்கலாம்.

by Editor / 11-01-2022 11:48:26am
பொங்கல் பண்டிகைவிடுமுறை முடிந்து  16ஆம் தேதி முன்பதிவு செய்தவர்கள் மாற்று தினத்தில் பயணிக்கலாம்.

தமிழகத்தில் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படஉள்ளது.இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு,தனியார் பேரூந்துக்களில் முன்பதிவு செய்துள்ளவர்கள் இந்நிலை 12ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம்.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள் பண்டிகை முடிந்த பின்னர் தங்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு திரும்பி செல்வதற்காகவும் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் அரசு ,16-ம் தேதி முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் திங்கள்கிழமைகளில் தன பயணத்தை தொடர்முடியும் இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 09.01.2022 ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிப்பால் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் 2 நாட்களில் திருப்பி தரப்படும்.என்றும்,16-ம் தேதி முன்பதிவு செய்தவர்கள் வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.என்றும் தமிழக - போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
 

 

Tags :

Share via