12வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

by Writer / 24-01-2022 05:54:06pm
12வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.


சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சுப்ரீ்கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்தது. 


இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. எனவே, மேலும் 5 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 12வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via