விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.-அண்ணாமலை

by Editor / 02-09-2021 10:18:05am
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.-அண்ணாமலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது இடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது தவறானது. விழாவில்இத்தனை பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளை அரசு விதிக்கலாம். ஆனால், முழுமையாக தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இதை பாஜக கடுமையாக எதிர்க்கும். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை உதாரணமாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் கரோனா குறைந்துவிட்டது என்பதால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுஉள்ளன. பள்ளிகளைத் திறக்கநாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அதே நிலையைத்தான் விநாயகர் சதுர்த்தி விழாவிலும் அரசு கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு மறுபரிசீலனை செய்யும் என நம்பிக்கை உள்ளது.

 

 

Tags :

Share via