கணக்கில் வராத ரூபாய் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல்.

by Editor / 05-11-2022 06:47:17pm
கணக்கில் வராத ரூபாய் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தராக பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து அந்த நாளில் மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பு சார் பதிவாளர்களாக நியமித்து, லஞ்சம் பெற்று கொண்டு முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்து வருவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்தது.

இது குறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பத்திரபதிவு துறை டிஐஜி ஆகியோருக்கு புகார்கள் சென்ற நிலையில் பொறுப்பு சார்பதிவாளர் பத்திர பதிவு செய்வதாகவும், தொடர்ந்து ஆன்லைன் பதிவுக்கான டோக்கன்களை நிறுத்தி வைத்துவிட்டு பொதுமக்கள் பத்திரபதிவு செய்யமுடியாத நிலை இருந்து வருவதாகவும், அந்த ஆன்லைன் டோக்கன்களை அதிகாரிகளே தங்களுக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வழங்கி முறைகேடாக பத்திரபதிவில் ஈடுபட்டு  வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 800 ரூபாய்  மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து  பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர் மற்றும் இடைத்தரகர்கள் 6 பேர் உட்பட 11பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via