மூதாட்டியை கற்பழித்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 24-01-2022 09:02:13pm
 மூதாட்டியை கற்பழித்த 2 பேர்  குண்டர் சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு சொந்தமான  விவசாய தோட்டத்தில் .கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

மதுபோதையில் அங்கு சென்று  2 வாலிபர்கள் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் திடீரென 2 பேரும் மூதாட்டி என்று பாராமல் பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கொடூரர்களை தேடி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட  பழனிசாமி மகன் சீனிவாசன் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் விக்னேஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கலெக்டர் கார்மேகம், சீனிவாசன், விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

 

Tags : 2 people arrested for raping grandmother

Share via